தமிழினம் தலை நிமிர்ந்த நாள்; தமிழீழ விடுதலைப் புலிகள் பிறப்பெடுத்த நாள்; இன்று அகவை 42 ஐ சந்திக்கின்றது!
இனவிடுதலைக்காக உயிர், பொருள், ஆவி என அனைத்தையும் துறந்து, தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய ஒரு வீர வரலாற்று மரபு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கட்டமைத்துத் தொடங்கிய நாள். இது ஒரு சரித்திர நாள்.
இனவிடுதலைக்காக உயிர், பொருள், ஆவி என அனைத்தையும் துறந்து, தம்மை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய ஒரு வீர வரலாற்று மரபு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கட்டமைத்துத் தொடங்கிய நாள். இது ஒரு சரித்திர நாள்.
'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்பது வெறும் பெயர் அல்ல; இந்த அகிலமே அஞ்சி வியக்கும் ஒரு பெரும் போராட்டத் தத்துவம். அது, 'பிரபாகரனியம்' என்னும் தத்துவச் சொல்லுக்குள் அடக்கம்.
'தமிழீழ விடுதலை' ஒன்றே புலிகளின் தாகம் எனக் கொண்டு இயங்கிய அந்த இயக்கமே தன் இயங்குதல் கோட்பாடுகள் மூலமாக இன விடுதலைப் போராட்டத் தத்துவங்களைப் படைத்துள்ளது.
அந்த ஒப்பற்ற உயரிய தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறுகளை உண்மை வழுவாது முழுமையாகத் தொகுத்தாலே, அது தமிழ் இனத்தின் புனித நூலாக விளங்கும். என்றும் முழுமையான வழிகாட்டல்களைத் தமிழினத்துக்கு அது வழங்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டங்களோடும் அதன் தத்துவங்களோடும் தமிழீழ விடுதலைக் கனவோடும் உலகெங்கும் வாழ்ந்துவரும் அனைத்து தமிழ் மக்களே! தமிழீழ விடுதலைப் புலிகளின் அகவை வாழ்த்துக்களோடு ஒன்றித்து இருப்போம்! விடுதலையை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம்!
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்." என்பது புலிகளின் உயிர்மூச்சு!
அன்புடன்,
சமராய்வு இணையம்.
***