தமிழ்மொழி சமசுக்கிரதத்தை விட மிகவும் தொன்மையும் செழிப்பும் மிக்கது: பிரதமர் மோடி

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

தமிழ் மொழி சமசுக்கிரதத்தை விட மிகவும் தொன்மையும் செழிப்பும் மிக்கது எனப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாசி-16 அன்று, பரீட்சை குறித்து மாணவர்களோடு கலந்துரையாடிய போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடுமுழுக்க துறைசார் பரீட்சையை எழுதவுள்ள இளந்தலைமுறை மாணவர்களுடனான ஒரு சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களுடனான கேள்வி, பதில் நிகழ்ச்சி முடிவில் அவர் விடைபெற இருந்த சமயத்திலே இவ்வாறு தெரிவித்தார், "மொழிகள் குறித்த அறிவு இருக்க வேண்டுமென நான் எப்போதும் உணர்ந்தவன். பலருக்குத் தெரியாது, ஆனால் சமசுக்கிரதத்தை விட மிகவும் பழைமையான மொழி தமிழ். தமிழ்தான் (உலகிலே) மிகப் பழைமையான மொழி," என்றார்.
தமிழ் மொழியின் அழகையும் மோடி அவர்கள் பாராட்டிப் பின்வருமாறு குறிப்பிட்டார், "தமிழ் மிகவும் அழகான மொழி, அஃதனை என்னால் பேசத்தெரியாது என்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கு "வணக்கம்" என்று மட்டும்தான் சொல்லத் தெரியும், அதைதாண்டி மேலே என்னால் பேசத் தெரியாது என்பது எனக்கு வருத்தமளிக்கிறது," என்றார்.
****
ஐயா, இந்த உண்மையை ஒரு பிரதமராகப் பொது மேடையில் மனந்திறந்து பேசியதைத் தமிழர்கள் நாம் தங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். மேலும், அத்துடன் நிற்காது தமிழ் மொழிக்கு உரிய தகமையை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!