சமூக வலைத்தளங்கள், தொடர்பாடல் வசதிகள் போன்றவற்றை முடக்குவதானது, அரச பின்னணியோடு நடைபெறும் ஒரு "நாசகாரத் துடைத்தழிப்பு நடவடிக்கையை" (sabotage operations against ethnic minority civilians), சான்றுகள் வெளிவராத வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியுமா என்ற ஒத்திகையில் பேரினவாத அரசு ஈடுபட்டு வருவதாக அவதானிக்க முடிகிறது. சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான தகுதி சிறிலங்கா அரசுக்கு சிறிதளவும் இல்லை என்ற வகையில் இந்த முடக்கத்துக்கான சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.
இவ்வாறான "நாசகாரத் துடைத்தழிப்பு நடவடிக்கை" இன் முதன்மை நோக்கமானது, பலம்பெற்றுவரும் ஒரு சமூகத்துக்கு பொருளாதார அழிவை ஏற்படுத்தி, அந்த இனத்தின் வளர்ச்சியை நலிவுறச் செய்வது ஆகும்.
பொருளாதாரப் பலம் மிக்க வலியவர்களே இந்த உலகை ஆட்சிசெய்துவரும் போக்கு இருந்துவரும் நிலையில், எந்த ஒரு செயல்முறைக்கும் இன்று பணம் என்பது மிக முக்கியமான ஒரு கருவியாகக் கையாளப்பட்டு வருகின்றது. சுருங்கக் கூறின், பணத்தின் அளவையும் அதன் கைமாறல்களையும் கண்காணித்தாலே போதும், என்ன நடவடிக்கையில் ஒரு தரப்பினர் இறங்கப் போகின்றார்கள் என்ற திட்டத்தை அறிவதற்கு. ஆகவேதான், இன்று உலகநாடுகள் எங்கும் பணத்தின் கைமாறல்களை அந்நாட்டுப் புலனாய்வுத் துறையினர் மிக முக்கியத்துவம் கொடுத்து புலனாய்வுசெய்து வருகின்றனர்.
உயிரிழப்பைத் தவிர்த்து, பொருளாதார அழிவை ஏற்படுத்துகின்ற நடவடிக்கை என்பது ஒரு புதிய உத்தியாக இப்போது சிறிலங்காப் பேரினவாத அரசால் சோதிக்கப்பட்டு வருகின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதிரான கடந்தகாலக் கலவரத்திலோ, இனஅழிப்பிலோ, போரிலோ எதுவாக இருந்தாலும் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கை விகிதாசாரத்தை குறைப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வந்தது. அது இன்று அனைத்துலக மத்தியில் இனப்படுகொலை என்ற குற்றச் சாட்டுக்கு உட்பட்டு, அதற்கான பரிகார நீதி எதிர்காலத்தில் வழங்கப்படலாம் என்ற நிலையை பேரினவாத அரசு எதிர்கொண்டு நிற்கிறது.
ஆகவே, ஒரேமாதிரயான ஓர் இனஅழிப்பு நடவடிக்கையை பேரினவாத அரசு, பூர்வ குடிக்கு எதிராகவும் சிறுபான்மை முசுலிம்களுக்கு எதிராகவும் மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் - அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறைக்குள் சிறிலங்கா இருப்பதால் - புதிய வடிவிலான தொலைநோக்கான இனஒழிப்பு நடவடிக்கை ஒன்றை சிறிலங்காப் பேரினவாத அரசு ஒத்திகைபார்த்து வருகின்றதா என்பதைச் சந்தேகிக்க முடிகிறது.
பிற இனச் சமூகங்களின் இயல்புவாழ்வுக்கு எதிரான ஒரு நாசகார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகப் பயிற்றுவித்து நெறிப்படுத்தப்படும் ஒரு காடையர் குழுப் படைகளை கடும்போக்கு மதவாதப் பின்புலத்திலும் இனவாதப் பின்புலத்திலும் கட்டமைக்கப் பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏதாவது ஒரு சிறிய உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி, கடந்த 2012 இல் இருந்து முசுலிம்களுக்கு எதிரான நாசகாரத் துடைத்தழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவது தெளிவாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளது.
ஆண்டு 2009 இற்குப் பின்னர், ஒருபக்கம் தமிழ்மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட மென்தீவிர இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவாறு, இன்னொரு பக்கத்தில் முசுலிம் மக்களுக்கு எதிரான நாசகார அழிப்பு நடவடிக்கையில் பேரினவாத அரசு ஈடுபட்டு வருகிறது. அது, ஏதோவொரு வகையில் இரண்டு - தமிழ் மக்கள், முசுலிம் மக்கள் - சமூகங்களுக்கு எதிரான ஒரு சமாந்தர நடவடிக்கையாக கட்டமைக்கப் பட்டுள்ளது. அதன் நோக்கம், இலங்கைத் தீவில் இருந்து பூர்வீகத் தமிழ்க் குடியையும் முசுலிம் மக்களையும் நலிவுறச்செய்து, ஒழித்துக்கட்டும் நடவடிக்கை உத்தியாகவே கொள்ள முடிகிறது.
ஆகவே, இதனை இலங்கை முசுலிம் மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். தங்கள் பலம், பலவீனம் எல்லாம் பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் கட்டப்பட்டுள்ளது. (பல சந்தர்ப்பங்களில் இது முசுலிம் தலைவர்களாலே கூறப்பட்ட பதிவுகள் உள்ளன). அந்தப் பொருளாதாரச் சிதைவுக்கான ஒரு நாசகாரத் தாக்குதல் முறை முசுலிம்களுக்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டிருப்பதால், இலங்கைத் தீவில் முசுலிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி விடும். அவர்கள் பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தை மேற்கொள்ள ஏதுவான நாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படுவார்கள். 2012 இற்குப் பின்னர் இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த முசுலிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கைத் தீவில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தமக்கு ஆதரவு வழங்கக்கூடிய உலகளாவிய முசுலிம் அமைப்புக்கள் மற்றும் நாடுகளை நாடிச் செல்லவேண்டிய ஒரு அவசியச் சூழ்நிலை இலங்கை முசுலிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வடக்குகிழக்கு இணைந்த தமிழீழ முசுலிம் மக்கள், தமிழ்மக்களோடு நல்லுறவை வளர்த்து, ஒன்றுபட்ட நீதிக்கான போராட்டங்களிலும் நகர்வுகளிலும் பங்குபற்ற வேண்டிய ஒரு வரலாற்றுச் சூழ்நிலையும் எழுந்துள்ளது.
இதே நாசகார அழித்தொழிப்பு நடவடிக்கை தான் - நாளை தமிழர்களும் பலம்வாய்ந்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கும் போது - தமிழர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் என்பதில் எந்தவித சந்ததேகமும் கொள்ளத் தேவையில்லை.
ஆகவே, தமிழ் மக்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான சிங்கள நாசகாரத் தாக்குதல்களைக் கண்டு, கைகொட்டி ரசிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமிழீழ முசுலிம் மக்களுடனான நல்லுறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களையோ, எங்களையோ பாதுகாப்பதற்கான பலம் இப்போது எங்களிடம் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளும் அதேவேளை, இரு சமூகங்களும் இணைந்து வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியைக் கட்டி எழுப்புவதிலும் நீதிக்கான போராட்டங்களிலும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.
சமூக வலைத் தளங்கள், தொடர்பாடல் வசதிகளை முடக்குவதானது, அரச பின்புலத்தில் நடைபெறும் நாசகார அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான சான்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கும், அதற்கு எதிரான உரையாடல்களை அடக்குவதற்குமாகும். இன்றைய காலத்தில், ஒரு சிறிய விடயம்கூட சமூக வலைத்தளங்களில் பரவலாக உரையாடப்பட்டு, அது அனைத்துலகச் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது வழமையாகியுள்ளது. இது, இன அழித்தொழிப்பு மற்றும் நாசகார அழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக சிறிலங்கா அரசுக்கு மாறியுள்ளது. எனவேதான் இந்த சமூக வலைத் தளங்களையும் தொடர்பாடல் வசதிகளையும் முடக்கி, சான்றுகள் இல்லாத வகையில் ஒரு நடவடிக்கையைச் செய்ய முடியுமா என்று சோதிக்கின்றது சிங்களப் பேரினவாதம்.
அதேவேளை, சிங்கள இனத்தை தொடர்ந்து போர்க்குணம் மிக்க காடையர்களாகவும் இனவெறி பிடித்த அரக்கர்களாகவும் தொடர்ந்து பேணிவரவேண்டிய ஒரு தேவையும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு இருக்கிறது. இல்லையேல், சிறுபான்மை மற்றும் பூர்வக் குடிகளை இலங்கைத் தீவில் இருந்து அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைச் செய்ய முடியாது.
போர் இல்லாத, தமக்கான எதிரி இல்லாத ஓர் அமைதிச் சூழலில் சிங்கள இனவாத அரக்கத்தனம் தூங்கி, அமைதிகொண்டு, போர்க்குணம் அற்றுப் போனால், அது சிங்கள இனத்தின் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து, இவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட நாசகாரக் காடையர் படைகள் அரச பின்புலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.
ஓர் உண்மையான, அமைதியான நல்லாட்சியை நிறுவப் பின்னடித்துவரும் சிறிலங்கா அரசு, பல உண்மைக்குப் புறம்பான காரணங்களை அனைத்துலகிற்கு முன்வைத்து வருகிறது. அதேவேளை, சிங்களச் சமூகத்துக்கு தொடர்ந்து இனவாதத்தை ஊட்டி வளர்த்துவருகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், சிங்கள அரசுக்கு எதிராக பூர்வ தமிழ்க் குடிகளோ அல்லது முசுலிம் மக்களோ ஏதாவது சிறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டால், இவ்வாறான நாசகாரக் காடையர் படையை ஏவிவிட்டு, இன அழித்தொழிப்பு அல்லது பொருளாதார அழித்தொழிப்பு நடவடிக்கை அரச பின்புலத்தில் கட்டவிழ்த்து விடப்படும் என்பதை குறியீடு செய்வதாகவும் இந்த சம்பவங்களைப் - அம்பாறை, கண்டி கலவரங்கள்- பார்க்க முடிகிறது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை மறைக்க முடியுமா என்று ஒத்திகை பார்ப்பதற்காகவே இவ்வாறு சமூக வலைத்தளங்கள், தொடர்பாடல் வசதிகள் போன்றன முடக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகும்.
இந்நிலையில், குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கான விசாரணைக் குழு, காவல்துறைக் குழு அமைக்க உத்தரவு போன்ற செய்திகள் எல்லாம் வெறும் கண்துடைப்புக்காகவே. நாசகார அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவும் மாட்டார்கள், தண்டிக்கப் படவும் மாட்டார்கள்.
அந்த நாசகாரப் படைகள், பேருந்துகளில் ஏற்றிவரப்பட்டு தெளிவாக நெறிப்படுத்தப்பட்டு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் தெளிவாக உள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும், சிறப்பு அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டு இருந்தபோதும், சமூக வலைத் தளங்கள் மற்றும் சமூகத் தொடர்பாடல் வசதிகள் முடக்கப்பட்டு, பல வர்த்தக நிலையங்கள் கடைகள் எரியூட்டப்பட்டு சேதப்படுத்தப் பட்டதற்கான சான்றுகளும் வெளியாகி உள்ளன.
***
த.ஞா.கதிர்ச்செல்வன்.
இவ்வாறான "நாசகாரத் துடைத்தழிப்பு நடவடிக்கை" இன் முதன்மை நோக்கமானது, பலம்பெற்றுவரும் ஒரு சமூகத்துக்கு பொருளாதார அழிவை ஏற்படுத்தி, அந்த இனத்தின் வளர்ச்சியை நலிவுறச் செய்வது ஆகும்.
பொருளாதாரப் பலம் மிக்க வலியவர்களே இந்த உலகை ஆட்சிசெய்துவரும் போக்கு இருந்துவரும் நிலையில், எந்த ஒரு செயல்முறைக்கும் இன்று பணம் என்பது மிக முக்கியமான ஒரு கருவியாகக் கையாளப்பட்டு வருகின்றது. சுருங்கக் கூறின், பணத்தின் அளவையும் அதன் கைமாறல்களையும் கண்காணித்தாலே போதும், என்ன நடவடிக்கையில் ஒரு தரப்பினர் இறங்கப் போகின்றார்கள் என்ற திட்டத்தை அறிவதற்கு. ஆகவேதான், இன்று உலகநாடுகள் எங்கும் பணத்தின் கைமாறல்களை அந்நாட்டுப் புலனாய்வுத் துறையினர் மிக முக்கியத்துவம் கொடுத்து புலனாய்வுசெய்து வருகின்றனர்.
உயிரிழப்பைத் தவிர்த்து, பொருளாதார அழிவை ஏற்படுத்துகின்ற நடவடிக்கை என்பது ஒரு புதிய உத்தியாக இப்போது சிறிலங்காப் பேரினவாத அரசால் சோதிக்கப்பட்டு வருகின்றது. சிங்களப் பேரினவாதம் தமிழர்களுக்கு எதிரான கடந்தகாலக் கலவரத்திலோ, இனஅழிப்பிலோ, போரிலோ எதுவாக இருந்தாலும் தமிழர்களின் சனத்தொகை எண்ணிக்கை விகிதாசாரத்தை குறைப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வந்தது. அது இன்று அனைத்துலக மத்தியில் இனப்படுகொலை என்ற குற்றச் சாட்டுக்கு உட்பட்டு, அதற்கான பரிகார நீதி எதிர்காலத்தில் வழங்கப்படலாம் என்ற நிலையை பேரினவாத அரசு எதிர்கொண்டு நிற்கிறது.
ஆகவே, ஒரேமாதிரயான ஓர் இனஅழிப்பு நடவடிக்கையை பேரினவாத அரசு, பூர்வ குடிக்கு எதிராகவும் சிறுபான்மை முசுலிம்களுக்கு எதிராகவும் மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் - அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறைக்குள் சிறிலங்கா இருப்பதால் - புதிய வடிவிலான தொலைநோக்கான இனஒழிப்பு நடவடிக்கை ஒன்றை சிறிலங்காப் பேரினவாத அரசு ஒத்திகைபார்த்து வருகின்றதா என்பதைச் சந்தேகிக்க முடிகிறது.
பிற இனச் சமூகங்களின் இயல்புவாழ்வுக்கு எதிரான ஒரு நாசகார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகப் பயிற்றுவித்து நெறிப்படுத்தப்படும் ஒரு காடையர் குழுப் படைகளை கடும்போக்கு மதவாதப் பின்புலத்திலும் இனவாதப் பின்புலத்திலும் கட்டமைக்கப் பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஏதாவது ஒரு சிறிய உப்புச் சப்பில்லாத காரணத்தைக் கூறி, கடந்த 2012 இல் இருந்து முசுலிம்களுக்கு எதிரான நாசகாரத் துடைத்தழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவது தெளிவாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளது.
ஆண்டு 2009 இற்குப் பின்னர், ஒருபக்கம் தமிழ்மக்களுக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட மென்தீவிர இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவாறு, இன்னொரு பக்கத்தில் முசுலிம் மக்களுக்கு எதிரான நாசகார அழிப்பு நடவடிக்கையில் பேரினவாத அரசு ஈடுபட்டு வருகிறது. அது, ஏதோவொரு வகையில் இரண்டு - தமிழ் மக்கள், முசுலிம் மக்கள் - சமூகங்களுக்கு எதிரான ஒரு சமாந்தர நடவடிக்கையாக கட்டமைக்கப் பட்டுள்ளது. அதன் நோக்கம், இலங்கைத் தீவில் இருந்து பூர்வீகத் தமிழ்க் குடியையும் முசுலிம் மக்களையும் நலிவுறச்செய்து, ஒழித்துக்கட்டும் நடவடிக்கை உத்தியாகவே கொள்ள முடிகிறது.
ஆகவே, இதனை இலங்கை முசுலிம் மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். தங்கள் பலம், பலவீனம் எல்லாம் பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் கட்டப்பட்டுள்ளது. (பல சந்தர்ப்பங்களில் இது முசுலிம் தலைவர்களாலே கூறப்பட்ட பதிவுகள் உள்ளன). அந்தப் பொருளாதாரச் சிதைவுக்கான ஒரு நாசகாரத் தாக்குதல் முறை முசுலிம்களுக்கு எதிராகக் கட்டமைக்கப் பட்டிருப்பதால், இலங்கைத் தீவில் முசுலிம் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகி விடும். அவர்கள் பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தை மேற்கொள்ள ஏதுவான நாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படுவார்கள். 2012 இற்குப் பின்னர் இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த முசுலிம்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கைத் தீவில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தமக்கு ஆதரவு வழங்கக்கூடிய உலகளாவிய முசுலிம் அமைப்புக்கள் மற்றும் நாடுகளை நாடிச் செல்லவேண்டிய ஒரு அவசியச் சூழ்நிலை இலங்கை முசுலிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, வடக்குகிழக்கு இணைந்த தமிழீழ முசுலிம் மக்கள், தமிழ்மக்களோடு நல்லுறவை வளர்த்து, ஒன்றுபட்ட நீதிக்கான போராட்டங்களிலும் நகர்வுகளிலும் பங்குபற்ற வேண்டிய ஒரு வரலாற்றுச் சூழ்நிலையும் எழுந்துள்ளது.
இதே நாசகார அழித்தொழிப்பு நடவடிக்கை தான் - நாளை தமிழர்களும் பலம்வாய்ந்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கும் போது - தமிழர்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்படும் என்பதில் எந்தவித சந்ததேகமும் கொள்ளத் தேவையில்லை.
ஆகவே, தமிழ் மக்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான சிங்கள நாசகாரத் தாக்குதல்களைக் கண்டு, கைகொட்டி ரசிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமிழீழ முசுலிம் மக்களுடனான நல்லுறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அவர்களையோ, எங்களையோ பாதுகாப்பதற்கான பலம் இப்போது எங்களிடம் இல்லை என்பதை உணர்ந்துகொள்ளும் அதேவேளை, இரு சமூகங்களும் இணைந்து வடக்கு கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியைக் கட்டி எழுப்புவதிலும் நீதிக்கான போராட்டங்களிலும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும்.
சமூக வலைத் தளங்கள், தொடர்பாடல் வசதிகளை முடக்குவதானது, அரச பின்புலத்தில் நடைபெறும் நாசகார அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான சான்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கும், அதற்கு எதிரான உரையாடல்களை அடக்குவதற்குமாகும். இன்றைய காலத்தில், ஒரு சிறிய விடயம்கூட சமூக வலைத்தளங்களில் பரவலாக உரையாடப்பட்டு, அது அனைத்துலகச் சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பது வழமையாகியுள்ளது. இது, இன அழித்தொழிப்பு மற்றும் நாசகார அழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக சிறிலங்கா அரசுக்கு மாறியுள்ளது. எனவேதான் இந்த சமூக வலைத் தளங்களையும் தொடர்பாடல் வசதிகளையும் முடக்கி, சான்றுகள் இல்லாத வகையில் ஒரு நடவடிக்கையைச் செய்ய முடியுமா என்று சோதிக்கின்றது சிங்களப் பேரினவாதம்.
அதேவேளை, சிங்கள இனத்தை தொடர்ந்து போர்க்குணம் மிக்க காடையர்களாகவும் இனவெறி பிடித்த அரக்கர்களாகவும் தொடர்ந்து பேணிவரவேண்டிய ஒரு தேவையும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு இருக்கிறது. இல்லையேல், சிறுபான்மை மற்றும் பூர்வக் குடிகளை இலங்கைத் தீவில் இருந்து அழித்தொழிக்கும் நடவடிக்கைகளைச் செய்ய முடியாது.
போர் இல்லாத, தமக்கான எதிரி இல்லாத ஓர் அமைதிச் சூழலில் சிங்கள இனவாத அரக்கத்தனம் தூங்கி, அமைதிகொண்டு, போர்க்குணம் அற்றுப் போனால், அது சிங்கள இனத்தின் இருப்புக்கே ஆபத்து என்பதை உணர்ந்து, இவ்வாறு நெறிப்படுத்தப்பட்ட நாசகாரக் காடையர் படைகள் அரச பின்புலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.
ஓர் உண்மையான, அமைதியான நல்லாட்சியை நிறுவப் பின்னடித்துவரும் சிறிலங்கா அரசு, பல உண்மைக்குப் புறம்பான காரணங்களை அனைத்துலகிற்கு முன்வைத்து வருகிறது. அதேவேளை, சிங்களச் சமூகத்துக்கு தொடர்ந்து இனவாதத்தை ஊட்டி வளர்த்துவருகிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், சிங்கள அரசுக்கு எதிராக பூர்வ தமிழ்க் குடிகளோ அல்லது முசுலிம் மக்களோ ஏதாவது சிறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டால், இவ்வாறான நாசகாரக் காடையர் படையை ஏவிவிட்டு, இன அழித்தொழிப்பு அல்லது பொருளாதார அழித்தொழிப்பு நடவடிக்கை அரச பின்புலத்தில் கட்டவிழ்த்து விடப்படும் என்பதை குறியீடு செய்வதாகவும் இந்த சம்பவங்களைப் - அம்பாறை, கண்டி கலவரங்கள்- பார்க்க முடிகிறது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை மறைக்க முடியுமா என்று ஒத்திகை பார்ப்பதற்காகவே இவ்வாறு சமூக வலைத்தளங்கள், தொடர்பாடல் வசதிகள் போன்றன முடக்கப்படுவதற்கான முதன்மைக் காரணமாகும்.
இந்நிலையில், குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டிப்பதற்கான விசாரணைக் குழு, காவல்துறைக் குழு அமைக்க உத்தரவு போன்ற செய்திகள் எல்லாம் வெறும் கண்துடைப்புக்காகவே. நாசகார அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவும் மாட்டார்கள், தண்டிக்கப் படவும் மாட்டார்கள்.
அந்த நாசகாரப் படைகள், பேருந்துகளில் ஏற்றிவரப்பட்டு தெளிவாக நெறிப்படுத்தப்பட்டு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான சான்றுகள் தெளிவாக உள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும், சிறப்பு அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டு இருந்தபோதும், சமூக வலைத் தளங்கள் மற்றும் சமூகத் தொடர்பாடல் வசதிகள் முடக்கப்பட்டு, பல வர்த்தக நிலையங்கள் கடைகள் எரியூட்டப்பட்டு சேதப்படுத்தப் பட்டதற்கான சான்றுகளும் வெளியாகி உள்ளன.
***
த.ஞா.கதிர்ச்செல்வன்.
முதலமைச்சரின் பின்வரும் கருத்து, இந்தக் கட்டுரைக்கு மேலும் ஆதாரத்தைச் சேர்க்கின்றது...
ReplyDeleteசட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் சமாதானத்தையும் நிலைநாட்ட அல்லது உருவாக்க வேண்டியவரான அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூட குற்றஞ் செய்தோரைத் தமது இனத்துடன் அடையாளப்படுத்தி அவர்களை ஒருபோதும் தண்டனை அனுபவிக்க விடமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறி வந்துள்ளார், கூறி வருகிறார்.எனவே குற்றம் புரிந்தவன் என்ன நினைக்கின்றான்? நான் எது செய்தாலும் எனக்கு ஜனாதிபதியும், அரசாங்கமும், அரசியல்வதிகளும் உடந்தையாக இருப்பார்கள். ஆகவே தொடர்ந்து நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவரலாம் என்று சிந்திக்கின்றான் இவ்வாறன செயற்பாடுகளின் வெளிப்பாடே நடந்துமடிந்த கலவரம்வரை இட்டுச் சென்றிருக்கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ......
உதயன் செய்தி: http://newuthayan.com/story/75105.html?utm_source=vuukle&utm_medium=talkoftown
ReplyDelete1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டது போல, கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை இந்த வன்செயல்கள் ஏற்படுத்தியுள்ளன. வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து, பிரதேச செயலர்கள் மட்டத்தில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அனைத்துக்குமான இழப்பீட்டை அரசே வழங்கவேண்டும்.
பெரியதும், சிறியதுமாக 30 பள்ளிவாசல்கள் வரை சேதமாக்கப்பட்டுள்ளன. அங்காடி வளாகங்களில்கூட முஸ்லிம்களின் கடைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சில சிங்கள இனவாதக் குழுக்களே இந்த வன்செயல்களுக்குக் காரணம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பட்டப்பகல் வேளையில்கூட அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். முஸ்லிம்களின் வணிக நிலையங்களும், வீடுகளும் வழிபாட்டிடங்களுமாக கோடிக்கணக்கான சொத்துக்கள் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. 1983ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன வன்முறைகளைப் போன்று இவையும் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளன –- என்றார்.
முசுலிம்களுக்கு எதிரான தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப் படையினர் பங்களிப்பு வழங்கியதற்கான ஆதாரம் இந்த இணைப்பில் உள்ளது:
ReplyDeletehttp://www.tamilwin.com/community/01/177726?ref=imp-news