தமிழ்ப் புத்தாண்டு எது? மிரள வைக்கும் இறுதித் தீர்ப்பு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! தமிழ்ப் புத்தாண்டு எது என்னும் குழப்பம் அனைவருக்கும் உண்டு. இதுகுறித்த தெளிவான ஆய்வை 'தமிழ்ச் சிந்தனைப் பேரவை' என்னும் அமைப்பினர் மிக ஆழமான தரவுகளைக் கொண்டு 'சித்திரை-1' தான் தமிழ்ப் புத்தாண்டு என நிறுவியுள்ளனர். இது குறித்து 'தமிழ்ச் சிந்தனைப் பேரவை' வெளியிட்ட விழியத்தை பாருங்கள்!

அன்பு உறவுகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இங்கு பலரும் கேட்ட ஒருசில கேள்விகளுக்கு பொதுவான பதிலைத் தருகிறேன். தமிழரின் தொடர்ஆண்டுக் கணக்கு மகாபாரத முடிவிலிருந்து கணிக்கப் படுகிறது. இதற்குக் கலியாண்டு என்றுஇ கலியுகத்தைக் குறித்தது. தற்போதய நாட்காட்டியை உருவாக்கியவர் வீட்டினன் என்றழைக்கப்பட்ட விஷ்னு. இவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று முன்பு ஜெயினர்களின் கணிப்பைக் கொண்டு சொல்லி இருந்தேன். ஆனால், அவர் ஏறத்தாழ 4000 வாழ்ந்திருந்தார் என்பதற்கு பதிய தரவுகள் கிட்டியுள்ளன. அது பற்றிப் பிறகு ஒரு விழியம் வெளியிடுகிறேன்.

நமக்கு 60 வருட சுழற்றியாண்டும் இருந்தது. இது ஆசீவகத்தோடு தொடர்புடையது. இது ஆழமான செய்தியுள்ள விடயம். இது பற்றி இன்னும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ விழியம் வெளியிடவில்லை. இதைப்பற்றிச் சொல்லும் போது இந்த 60 ஆண்டுகளின் பெயர் வரலாற்றையும் சொல்கிறேன்.

அதோடு இத்தகைய நாட்காட்டிகளில் மூன்று வருடத்திற்கு ஒருமுறை 13 மாதங்கள் இருக்கும். அதை 'அதிக மாஸ்' என்று அழைக்கிறார்கள். அதைச் சில இனங்கள் பீடை மாதம் என்றும், சில இனங்கள் அதிர்ஷ்ட மாதம் என்றும் கொள்கின்றனர். எனவேஇ அவர்களின் ஆண்டுக்கணக்கு சிறு பிள்ளைத் தனமானது. தமிழரின் நாட்காட்டி, சோலாரோ, லூனோ சோலாரோ என்று அழைப்பதைவிட ராசி நாட்காட்டி என்று அழைப்பதே சரியானது. இதற்கு வரலாற்றைத் தக்கவைக்கும் பண்பு உள்ளது.

தமிழரின் நாட்காட்டியே இன்று உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. மலையாளிகள், அஸ்ஸாமியர், பஞ்சாபிகள் தவிர அனைத்து இந்தியர்களும் லூனோ-சோலார் காலண்டரைத் தான் கடைபிடிக்கிறார்கள். அவர்களது வருடப்பிறப்பு ஒவ்வொரு வருடமும் ஒரே ஆங்கிலத் தேதியில் வராது. சான்றாக, தெலுங்கு வருடப்பிறப்பு 2015ல் மார்ச் 21ல். 2016ல் ஏப்ரல் 8ல். 2017ல் மார்ச் 28ல். 2018ல் மார்ச் 18.

எல்லாம் அறியாமை! தமிழன் எடுப்பார் கைப்பிள்ளை தானே! இந்த விழியம் சித்திரையே தமிழ்ப்புத்தாண்டு என்று ஐயமற நிறுவுகின்றது. வியக்க வைக்கும் வரலாற்றுச் செய்திகள், ஏராளம்! ஏராளம்!! காணுங்கள். மேலதிகமாகப் பகிருங்கள்.

உலக நாட்காட்டிகள் அனைத்தும் தமிழரின் நாட்காட்டியை அடிப்படையாக வைத்து, பலப்பல காலங்களில் உருவானவையே! தமிழ்ப் புத்தாண்டு தை ஒன்றா அல்லது சித்திரை ஒன்றா என்ற குழப்பம், திராவிடனால் தொடங்கப்பட்டு கடந்த 50 ஆண்டுக்காலமாக தமிழரை வாதித்து வந்த குழப்பம். தமிழரின் சொத்துக்களை யூதபிராமணனுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதே திராவிடனின் திட்டம்.

இதைப் புரியாமல் இந்தச் சதிக்கு துணைபோன தமிழறிஞர்கள் ஏராளம். இவர்கள் தமிழ் மாதப் பெயர்கள் என்று இணையான மாதப் பெயர்களையும் உருவாக்கி தங்களது தமிழழிப்புப் பணியையும் செவ்வனே செய்தனர்.
நன்றி.
- மூலம், தமிழ்ச் சிந்தனைப் பேரவை.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!