"இந்திய நலனும் ஈழத் தமிழர்களுடைய நலனும் சந்திக்கின்ற புள்ளியில் தான் ஈழத் தமிழர்களுடைய விடிவு தங்கியிருக்கின்றது. அவ்வாறு சந்திக்கின்ற புள்ளியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சீனாவின் இரண்டாவது கொங்கொங்காக இலங்கையை சீனா மாற்றிவருகின்றது. தமிழீழக் குடியரசு அமைவது ஒன்றுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கான ஒரே மார்க்கமாகும்.
இதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் திரும்பத் திரும்பக் கூறவேண்டியுள்ளது. அதை நாம் தொடர்ந்து எடுத்துக்கூறுவோம்."
இவ்வாறு தமிழ்த் தேசியச் சிந்தனையாளரான பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் தொடர்ந்து தனது - பூகோளவாதமும் புதிய தேசியவாதமும் - என்ற நூலில் அடக்கியுள்ள தனது பூகோள அரசியல் சிந்தனைகளை விளக்கியுள்ளார். அந்த உரையை நீங்களும் முழுமையாக கேட்க: