கடமையை உணர்ந்து செயலாற்றுவோம்!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0


எமது அன்புக்குரிய தமிழ் மக்களே!
நாள் 12,03.2018, தமிழ் இனஅழிப்புக்கு நீதி வேண்டியும் எமது பூர்வீக உரிமைகளை மீட்பதற்குமான எழுச்சிப் போராட்டம் செனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு  முன்னே நடைபெறுகிறது. ஐரோப்பிய வாழ் தமிழ்மக்கள் அதில் எழுச்சியோடு பங்கெடுத்து, உரிமைக்குரல் எழுப்ப வேண்டும் என்பதை உரிமையோடு வேண்டி நிற்கின்றோம்!

ஓட்டியற்று வழியறியாது தண்ணீரில் மிதந்து செல்லும் ஒரு கப்பலைப் போன்று, தேங்கிக் கிடக்கின்றது எமது விடுதலைப் போராட்டம். இந்தத் தேக்க நிலை நெடுங் காலத்துக்கு நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது. நீரோட்டத்தை அறிந்து,  செல்வழியைக் கண்டறிந்து எமது இலக்கை நோக்கி மிகத் துரிதமாக நாம் பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழலை எதிர்கொண்டு நிற்கின்றோம்.

மக்கள் மயப்பட்ட இன்றைய போராட்டக் காலகட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கிடைக்கின்ற ஒவ்வொரு போராட்டத்தையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி, மக்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் களத்தில் இறங்கவேண்டிய வரலாற்றுக் கடமையை அனைவரும் நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது.

எனவே, இனஅழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிராக 12.03.2018 செனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. போராட்டத்தில் எழுச்சியோடு பங்கெடுத்து, எமது இன விடுதலைக்கான போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பதற்காக அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! சுவிற்சர்லாந்து செனீவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அணிதிரண்டு நிற்போம்! ஒன்றுபட்டு விடுதலை முரசறைவோம்! தொடர்ந்து போராடுவேம்! உரிமைகளை வென்றெடுப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்."

அன்புடன்.





Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!