திரு.சீமானுடைய குரல்கள், தமிழ் நாட்டு மக்களினதும் உலகத் தமிழரினதும் மனங்களில் வீசப்படுகின்ற புரட்சிக்கான விதைகள்!
எழுச்சிக்கான, இனத்தால், மொழியால் ஒன்றுபடுவதற்கான, முறையான ஆய்வுகளில் இருந்து வெளிப்பட்ட, கடந்தகாலப் படிப்பினைகளில் இருந்து உருவான, தமிழர்களை அறைகூவி எழுப்புகின்ற கருத்துக்கள் அவை.
எமது ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பு, ஒட்டுமொத்த உலகத் தமிழரின் எழுச்சிக்கான கட்டாயத்தைத் தோற்றுவித்துள்ளது.
திரு.சீமானுடைய போராட்டமும் அவரது கருத்துப் புரட்சியும் காலத்தின் கட்டாயம். இதைத் தமிழர்கள் இப்பொழுது நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகத் திரு.சீமானின் நகர்வுகளை அவதானித்து வந்தவன் என்கின்ற முறையில், தீர்க்கமாகப் புரிந்துகொண்டவன் என்கின்ற வகையில், அவருடைய நகர்வுகளைக் குழப்பும் சக்திகளுக்கு எதிராகப் பேசிப் புரிதலை உண்டுபண்ண வேண்டிய பொறுப்பு கடமையுணர்வுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறேன்!
"தமிழ்நாட்டில் விடுதலை இல்லை என்றால் தமிழர்களுக்கே விடுதலை இல்லை" என்பதை அறிவீர்களா?? !!
இதை உணர்ந்தவர்கள் நிச்சியம் தமிழ்நாட்டு மக்களின் புரட்சிக்குத் தடையாக நிற்கமாட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவக்கூடாது, அவர்கள் மட்டும் எங்களு உதவவேண்டும், எங்களுக்காக நெருப்பில் எரிய வேண்டும் என நினைப்பது என்ன நியாயம்??!!
தமிழர்களுக்கு உலகில் எங்கு பிரச்சினை என்றாலும் ஒட்டுமொத்தத் தமிழர்களும் பரஸ்பர ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டியது அவசியம்.
தமிழர்களுக்குத் தமிழர்கள் தான் உதவமுடியுமே தவிர பிற இனத்தவர்கள் அல்ல!
முள்ளிவாய்க்கால் அழிவு எப்படி நடந்தது, அதை ஏன் தடுக்க முடியாமல் போனது என்று முழுமையாக ஆராய்கின்ற ஒவ்வொருவருக்கும் திரு.சீமான் அவர்களின் போராட்டத்தின் நியாயங்கள் புரியும்!
தமிழின அழிப்புக்கே காரணமான கருணாநிதி தரப்பை மீண்டும் அரியணையில் அமர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டுவரும் சில கூட்டங்கள் மீது தமிழர்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டியது கட்டாயம்!
இன்னுமொரு அழிவு வேண்டாம்! அப்படியொரு அழிவு ஏற்படும் பட்சத்தில் அதைத் தடுத்து, எம்மோடு தோள்கொடுப்பதற்கு ஒரு பலமான தமிழ்நாடு இருக்கவேண்டும். அதற்கான அடித்தளத்தைப் போடுகின்ற திரு. சீமானின் முயற்சிக்கு உறுதுணை நிற்போம்! எமக்கு நடந்த அழிவில் இருந்தே பாடத்தைக் கற்றுக் கொள்வோம்!
நன்றி.
அன்புடன்,
த.ஞா.கதிர்ச்செல்வன்.