துசிடிடிசுவின் பொறி

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

கி.மு. 5ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பெலொப்பொனேசியன் போரை எழுதிய வரலாற்றாசிரியரான துசிடிடிசு என்பவர், அந்தப் போரில் ஜெனரல் தர அதிகாரியாகச் செயற்பட்டதோடு கண்கண்ட நேரடிச் சாட்சியாகவும் இருந்து அந்த வரலாற்றை எழுதியுள்ளார். ஏத்தெனியர்களின் எழுச்சி இசுப்பார்ட்டாக்களை அச்சுறுத்தியதால் பெலொப்பொனேசியன் போருக்கு வழிவகுத்தது என எழுதியுள்ளார்.

ஏற்கெனவே பலம்பெற்று மேலாதிக்கத்தைப் பெற்றிருந்த ஒரு அரசுக்கு, புதிதாக எழுச்சிபெற்று மேலாதிக்க வலுவைப் பெற்றுவந்த மற்றுமொரு அரசால் அச்சம் ஏற்பட்டதால் பெலொப்பொனேசியன் போர் ஏற்படக் காரணமாக அமைந்தது என துசிடிடிசு எழுதியுள்ளார்.

இந்த அடிப்படைகள் தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுவருவதாக ஃகர்வாட்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அமெரிக்க அரசறிவியலாளருமான (American political scientist) Graham Tillett Allison என்பவர் - ஏப்பிரல்-6, 2017 -  The New York Times என்ற செய்தித் தாளுக்கு ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

போருக்கு வழிகோலுவதற்கான ஒரு பொறி போன்று இந்த அம்சம் இருப்பதாலும், அதனை பெலொப்பொனேசியன் போரை எழுதிய வரலாற்றாசிரியர் விளக்கியிருப்பதாலும் இந்த அம்சத்துக்கு துசிடிடிசுவின் பொறி’ (Thucydides Trap) என்ற சொற்பதத்தை கிரகம் ரி. அல்லிசன் வழங்கியுள்ளார். சமகாலப் பூகோள அரசியலில் துசிடிடிசுவின் பொறிஎன்ற சொற்பதம் பரவலாக உரையாடப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போரை எவ்வாறு தவிர்ப்பது அல்லது அந்தப் போருக்கு வழிவகுக்கக்கூடிய காரணிகளை, சூழலை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பொருளில் குறிப்பிடுவதற்கு துசிடிடிசுவின் பொறியைஎவ்வாறு தவிர்ப்பது என்ற சொற்பதமே தற்போது பூகோள அரசியல் அரங்கில் கையாளப்பட்டு வருகின்றது.
***  

த.ஞா.கதிர்ச்செல்வன்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!