"சிறுகதை"
முள்ளிவாய்க்கால் அழிவிற்கு
முன்பதான ஆண்டில் பிறந்தவன் அவன்.
பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில்
பாதம் பதித்தான் இவ்வருடம்.
முன்பதான ஆண்டில் பிறந்தவன் அவன்.
பாடசாலையில் ஐந்தாம் ஆண்டில்
பாதம் பதித்தான் இவ்வருடம்.
போரில் தந்தை போய்விட்டாரெனப்
புரிந்திருந்தாலும்,
வலியினை உணரும்
வயதில்லை,
தாயின் சிறகினுள்
தங்கையோடு வாழுமவனுக்குத்
´´திலீபன்´´ என்று பெயர்.
புரிந்திருந்தாலும்,
வலியினை உணரும்
வயதில்லை,
தாயின் சிறகினுள்
தங்கையோடு வாழுமவனுக்குத்
´´திலீபன்´´ என்று பெயர்.
வகுப்பில் சுட்டியென்றாலும்
வரம்புமீறும் செயல்களில்லை அவனிடம்,
கேள்வியொன்று ஆசிரியர்
கேட்டுமுடிக்குமுன்பே
பதில் அவனிடமிருந்து
பாய்ந்து வந்துவிடும்.
வரம்புமீறும் செயல்களில்லை அவனிடம்,
கேள்வியொன்று ஆசிரியர்
கேட்டுமுடிக்குமுன்பே
பதில் அவனிடமிருந்து
பாய்ந்து வந்துவிடும்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கென
பொழுது புலருமுன்னெழுந்து கற்பான்.
தாய் அருகிருந்து கற்றலில்
தனிப்பிரியம் அவனுக்கு...
பொழுது புலருமுன்னெழுந்து கற்பான்.
தாய் அருகிருந்து கற்றலில்
தனிப்பிரியம் அவனுக்கு...
அன்றும் அப்படித்தான்...;
ஆழ்ந்து கற்றுக்கொண்டிருந்தவன்
ஆழ்ந்து கற்றுக்கொண்டிருந்தவன்
´´அப்பு திலீபன் .......,´´
அழைத்த தாயை நோக்கி
´´என்னம்மா ...´´ என்றான்.
அழைத்த தாயை நோக்கி
´´என்னம்மா ...´´ என்றான்.
´´பாடசாலை முடிச்சு
பல்கலைக்கழகம் போய் வந்து
என்ன வேலை செய்யப்போறீங்கள் ...?´´
ஏக்கத்துடன் பரிதவிக்கும் தாயின் கேள்வியென
எந்தப் பிள்ளையாலும் உணர முடியுமாதலால்;
பல்கலைக்கழகம் போய் வந்து
என்ன வேலை செய்யப்போறீங்கள் ...?´´
ஏக்கத்துடன் பரிதவிக்கும் தாயின் கேள்வியென
எந்தப் பிள்ளையாலும் உணர முடியுமாதலால்;
நான் ´´வைத்தியர்´´ ஆகப் போறன் என்றவனை ,
´´ஆகி ..? ´´ எனத் தாய் கேட்கவும்,
´´இஞ்ச உள்ள எல்லாருக்கும்
இலவசமா வைத்தியம் செய்வன்´´ என்றவனை
இறுகத் தழுவினாள் தாய்.
´´ஆகி ..? ´´ எனத் தாய் கேட்கவும்,
´´இஞ்ச உள்ள எல்லாருக்கும்
இலவசமா வைத்தியம் செய்வன்´´ என்றவனை
இறுகத் தழுவினாள் தாய்.
சிறிது நொடிகளின் பின்பு
சிரித்தபடியே கேட்டாள் .....
"எவருக்கெல்லாம்" இலவசமாய் மருந்து கொடுப்பீங்கள்..?´´
´´அப்பா இல்லாத ஆக்களுக்கு´´ என்ற பதில்
அவனிடமிருந்து வருமென
அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
சிரித்தபடியே கேட்டாள் .....
"எவருக்கெல்லாம்" இலவசமாய் மருந்து கொடுப்பீங்கள்..?´´
´´அப்பா இல்லாத ஆக்களுக்கு´´ என்ற பதில்
அவனிடமிருந்து வருமென
அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவள் கண்களை
அடைத்த கண்ணீரை மறைத்தபடி
பேச்சை மாற்றினாள்.
அடைத்த கண்ணீரை மறைத்தபடி
பேச்சை மாற்றினாள்.
´´சரி, நீங்கள் வைத்தியர் ஆகேல்லையெண்டா.....´´ என்றவளை
சடுதியாகத் திரும்பிப் பார்த்துவிட்டு
சற்று அமைதி காத்தவனை
´´ஐயோ குஞ்சு , அம்மா சும்மா சொன்னான்´´
என்றவள் சமாதானிக்குமுன்னே
அவன் சொன்னான்.
சடுதியாகத் திரும்பிப் பார்த்துவிட்டு
சற்று அமைதி காத்தவனை
´´ஐயோ குஞ்சு , அம்மா சும்மா சொன்னான்´´
என்றவள் சமாதானிக்குமுன்னே
அவன் சொன்னான்.
´´அப்பிடி நான் வைத்தியர் ஆகேல்லையெண்டா
அப்பா இல்லாத எல்லாருக்கும்
இலவச மருத்துவம் கிடைக்கப் போராடுவன் ...´´
அப்பா இல்லாத எல்லாருக்கும்
இலவச மருத்துவம் கிடைக்கப் போராடுவன் ...´´
அவளும் விடுவதாயில்லை..
´´அப்பிடியெல்லாம் தரேலாதெண்டு சொன்னா...´´
அவள் முடிக்குமுன்னே
அவனிடமிருந்து வந்தது பதில் .,
´´அப்பிடியெல்லாம் தரேலாதெண்டு சொன்னா...´´
அவள் முடிக்குமுன்னே
அவனிடமிருந்து வந்தது பதில் .,
´´நான் உண்ணாவிரதம் இருப்பன்....´´
..........................................................
..........................................................
அதன் பின்பு பேசமுடியாது
அடைத்துப்போனதவள் குரல்,
அது அந்தப் பெயருக்கேயுரிய குணமென
அப்போதே அந்தத்தாய் புரிந்திருப்பாள் .
..........................................................
அதன் பின்பு பேசமுடியாது
அடைத்துப்போனதவள் குரல்,
அது அந்தப் பெயருக்கேயுரிய குணமென
அப்போதே அந்தத்தாய் புரிந்திருப்பாள் .
- தேவன்-