இப்போது சிங்கள தேசம் உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்கும் ‘வெள்ளைக்கொடி’ விவகாரத்தில் கொல்லப்பட்டவர்களில் முதன்மையானவராகப் பேசப்பட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்களின் துணைவியார் திருமதி நடேசன் வினித்தா அவர்களின் புகைப்படத்தோடு மேலும் கொல்லப்பட்ட ஆறுபேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமிழீழ போர்க்கால ஊடகவியலாளர் திரு.நரேன் கார்த்திகேசு அவர்கள்.
இதில் சிறுவன் ஒருவரின் புகைப்படமும் அடங்கியுள்ளது. இந்த ஆறு பேரும் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை அடையாளம் காட்டக்கூடியவர்கள் இருந்தால்அவர் தம் உறவுகளுக்குப் பயனுடையதாக அமையும்.
வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு சரணடைந்தவர்களை உலக நீதிக்குப் புறம்பாக நரவேட்டையாடிய சிங்களதேசம் திருமதி நடேசன் அவர்களின் கொலைக்கும் என்ன நியாயத்தைச் சொல்லப்போகின்றது?
பதிவு:- திரு.சுரேன் கார்த்திகேசு.
குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.