இரட்டைவாய்க்கால் மாவீரர் மண்டபம் குறித்த குறிப்பு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0

இது 2009 இற்கு முன்பு ஒரு பொதுச்சந்தை. இதை நாங்கள் சந்தை என்று சொல்வதில்லை. மாவீரர் மண்டபம் என்றே சொல்லிப் பழகிவிட்டோம்.
இரட்டைவாய்க்கால் சந்திக்கு(ஏ-35 வீதி) மிகக்கிட்டிய தூரத்திலேயே இந்த சிறிய கட்டடம் அமைந்திருந்தது. பல நூற்றுக்கணக்கான மாவீரர்களை இளைப்பாற்றிய இந்தக் கட்டடம் மட்டும் நினைவில் வந்து செல்கிறது. தங்கள் பெற்றோர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்றே பல போராளிகளுக்குத் தெரிந்திருக்காது. 
வீரச்சாவு அடைந்துவிட்டால் அவர்களின் வித்துடல்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லமுடியாது. இருப்பதற்கு இடமே இல்லாதபோது வித்துடல்களை அவரவர் 'தரைப்பால்' கொட்டில்களுக்குக் கொண்டு செல்வதில்லை. 
இந்தக்கட்டடத்தில் வித்துடல்கள் உறவினர்கள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். வீரச்சாவு அடைந்தவர்களின் நண்பர்களுக்கு மாவீரர்களின் குடும்பங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்று தெரிந்தால் தகவல் அவர்களுக்கு கிடைக்கும். 
இல்லாவிட்டால் புலிகளின் குரல் வானோலியிலோ அல்லது ஈழநாதம் பத்திரிகையிலோ தான் தங்கள் பிள்ளைகளின் பெயர்களைப் பார்த்து தெரிந்துகொள்வார்கள்.


படப்பிடிப்பு-இளங்கீரன்
பதிவு: திரு.சுரேன் கார்த்திகேசு.
குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!