![]() |
திரு.நரேன் |
இறுதியுத்த காலப்பகுதியில் ஒவ்வொரு இடங்களிலும் பொதுமக்களுக்கு கஞ்சி கொடுத்து வயிராற்றிய புண்ணியவான்களில் இவரும் ஒருவர்.
இடம்பெயர்ந்து செல்கின்ற மக்களை வாகனங்களில் ஏற்றியிறக்கும் பணியில் இருந்து காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் பணி மற்றும் ஏனைய மக்களுக்கு தொற்றுநோய் வராமல் இருப்பதற்கு இறந்தவர்களைப் பொருத்தமான இடங்களில் புதைக்கும் பணி, குடிநீர் வழங்கல் என சில நூற்றுக்கணக்கான தொண்டர்களை இணைத்துப் பெரும் பங்காற்றிய திரு.நரேன் அவர்கள் படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்:- சுரேன் கார்த்திகேசு.