தேசியத் தலைவருடைய வீரச்சாவு நிகழ்வை ஏன் 02.08.2025 அன்று முன்னெடுக்க இருப்பது குறித்து விளக்குகிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவாராகச் செயற்பட்ட திரு.அறிவுமணி ஆசிரியர் அவர்கள்.
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரச்சாவைத் தழுவியிருந்தார்.
இன்றுவரை அவரது வீரச்சாவை நம்பமுடியாது, ஆறாத பெரும் காயத்தை உலகத் தமிழ் மக்களுக்கும், தலைவரை நேசித்த உலகளாவிய மானுட சமுதாயத்துக்கும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைக்காக தன்னுடையதும் தனத குடும்பத்தினதும் வாழ்நாளை முழுமையாக அரும்பெரும் கொடையாக்கிய தேசியத் தலைவருடைய வீரச்சாவு நிகழ்வு கடந்த 16 ஆண்டுகளாக செய்யப்படாது இருந்துவருகிறது.
கடந்த காலங்களில் அவருடைய வரலாறு திரிபுபடுத்தப்பட்டு வருகிறதைப் பார்க்க முடிகிறது. அதாவது, ஆங்காங்கே கடந்த ஆண்டுகிளல் சில உணர்வாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும், சரியாக உறுதிப்படுத்தி உத்தியோக பூர்வமாக ஒரு பேரறிவுப்புச் செய்து முன்னெடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
அவருடைய வீரச்சாவு நிகழ்வு வரலாற்று ரீதியாகச் சரியாகப் பதிவுசெய்யப்படாத குறை நிலவிவந்தது. இவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் வகையில், இறுதிப் போரில் நேரடியாக களத்தில் நின்றுவந்த போராளிகளை நேர்கண்டு, மிக நீண்ட ஆய்வுகளைச் செய்து, அவருடைய வீரச்சாவு உறுதிப்படுத்தப்பட்டது.
இருந்தாலும், அந்த ஆய்வின் முடிவுகளை காலத்தின் தேவைகருதி, வெளியிடுவதை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது, தேசியத் தலைவருடைய வீராச்சாவை உறுதிப்படுத்தி ஒரு பொதுவான நாளில் அவருக்கான அந்த பெரு நிகழ்வைச் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்னிலையில், கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கான வீரச்சாவு நிகழ்வை, உத்தியோக பூர்வமாக செய்யவதற்கான முயற்சிகளை புலம்பெயர் வாழ் முன்னாள் போராளிகள் மேற்கொண்டு வந்தார்கள்.
உள்ளக ரீதியாக நீண்ட உரையாடல்களை அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளோடும் பேசிவந்தார்கள். அந்த அடிப்படையில், பெரும் தாயர்ப்படுத்தல்களை மேற்கொண்டு வந்தகாரணத்தால், ஒரு பொதுவான நாளில் அவருக்கான வீரச்சாவு நிகழ்வை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் எதிர்வரும் 02.08.2025 அன்று பேரெழுச்சியோடு நிகழ்வு செய்வதாக நாள் குறிக்கப்பட்டது. இதற்காக இந்நிகழ்வை உரியமுறையில் உத்தியோக பூர்வமாக நிகழ்த்துவதற்கு என 'மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்' என்ற அமைப்பு நிறுவப்பட்டது.
அந்த வகையில், கடந்த 15.06.2025 அந்று 'நினைவெழுச்சி அகவத்தினரால்' சுவிஸ் நாட்டில் வைத்து ஊடகச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
அந்த சந்திப்பில் ஐரோப்பா வாழ் தமிழ் மக்களையும், அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களையும் பேரணியாகத் திரண்டு தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரச்சாவு நிகழ்வை உணர்வெழிச்சியோ முன்னெடுக்க, அவருடை வரலாற்றை சரியாகப் பதிவுசெய்யும் பொறுப்பில் அனைவரையும் உரிமையோடு பங்கெடுக்குமாறு அந்த ஊடகச் சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணொளி உள்ளே:
https://odysee.com/@N%C4%93rmoli:4/Press-meet-swiss:3
நன்றி.
செய்தித் தொகுப்பு:- சமராய்வு இணையம்.