அம்பாறை மாவட்டத்தில் தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்.

TGK
0

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது இன்றைய தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.


இதில் பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக இன, மத பேதமின்றி தமிழ், முஸ்லிம் இளைஞர்கள், மாணவர்கள் என பல நூறு பேர் தங்களது கையொப்பங்களை ஆர்வத்தோடு இட்டதோடு தமிழின அழிப்பின் வலிகளையும் ஆர்வத்தோடு கேட்டறிந்ததோடு, தமது கையங்களை இட்டிருந்தார்கள்.


இன்றைய இந்த நிகழ்வில், இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் திரு. தாமோதரம் பிரதீபன் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் திரு. காந்தன் ஆகியோரும்  கலந்து கொண்டிருந்ததோடு, 


பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடமும் ஊடகங்களிடமும்  இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் எமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், பாதிப்புகள் பற்றியும் அதற்காக நாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.


இப்போராட்டமானது தாயகச் செயலணியினரின் ஒருங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இணைப்பு:














































































Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!