பிரிகேடியர் பால்ராச் குறித்த சிறு குறிப்பு!

தங்கேசுவரன் கதிர்ச்செல்வன்.
0
"குடாரப்புத் தரை இறக்கத்திற்கு முன்னர் அண்ணையக் கடைசியாகச் சந்தித்தன். ஆனையிறவுப் படைத்தளம் வெற்றிகொள்ளப் பட்ட பின்னர் முதன் முறையாக அண்ணையை அப்பதான் சந்திக்கப் போறன், அங்கே அண்ணை மற்ற எல்லாத் தளபதிகளோடும் கதைத்துக்கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றபோது என்னைக் கண்டிட்டு அண்ணை எழுந்துவிட்டார். அண்ணை எழுந்ததைப் பார்த்திட்டு ஏனைய தளபதிகளும் எழுந்துவிட்டனர்."
 "வா பால்ராச், எதிரியே உன்னைப் பாராட்டி விட்டான். இனி அதற்கு மேல் நான் என்னத்தை உன்னைப் பாராட்ட." என்று அண்ணை என்னிடம் கூறினார். "சரியோ பிழையோ அண்ணை சொன்னால் நான் செய்வேன்." 

மேலே உள்ள கூற்று பிரிகேடியர் பால்ராச் அண்ணை அவர்களுடையது.

சமாதான காலத்தின் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூரிற்குச் சென்றிருந்தார். பால்ராச் அண்ணை அவர்களின் வருகையை கேள்விப்பட்டு, சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்த மருத்துவமனைக்கு அவரைப் பார்க்கச் சென்ற பல மக்கள் பால்ராச் அண்ணை அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்று பல விதமான அன்பளிப்புப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்தனர். 
ஆனால், பால்ராச் அண்ணையோ அவர்களிடம், "தனிப்பட்ட முறையில் எனக்கென்று எந்த அன்பளிப்புப் பொருட்களும் தரவேண்டாம். நீங்கள் தரவிரும்புவதை எனக்கென்று தராமல் இயக்கத்திற்கென்று கொடுத்துவிடுங்கள்" என்று அவற்றைப் பெற மறுத்துவிட்டார்.
சமாதான காலத்தில் ஒருசில வசதி வாய்ப்புக்கள் வந்தபோதும் தனக்கென்று எந்த வசதிகளையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் மிகமிக எளிமையாக வாழ்ந்தவர்.
குறைந்தபட்சம் தனது முகாமுக்கு மின்சார வசதிகூட பெற்றுக்கொள்ளாமல் மண்ணெண்ணை விளக்கு (Hurricane lamp) வெளிச்சத்தில்தான் பல காலமாக இருந்து வந்தவர்.
***
சி.சேனனின் பதிவு.
குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!